இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது. அணியும் ஆடைகளை வைத்து மதிப்பிடும் பழக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது.
